மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவின் மூன்றாம் நாளான இன்று (22.01.2020) மதுரை மாநகரில் உள்ள எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வினய்துவக்கி வைத்தார்கள். இப்பரிசோதனை முகாமில் கண் பரிசோதனையை அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவர்களும் முழு உடல் பரிசோதனையை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களும் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.