7
31-வது தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு கையில் லட்டு கொடுத்தும், அணியாதவர்களை தங்களது கைகளாலேயே அவர்களது தலையில் தாங்களாகவே தலையில் கொட்டச் சொல்லி,குட்டு கொடுத்தும், தமது தலையில் தாங்களாகவே கொட்டிக் கொள்வதே உங்களுக்கான பரிசு எனக்கூறி, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறியும், தவறாமல் ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.