10
இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் பொங்கல் விழா நடந்தது. எம்ஜிஆர் தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். அப்பகுதி நரிக்குறவர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பொங்கல் விழாவில் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் ஏ.முகமது சலாவுதீன் பங்கேற்றார். * மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுக பெருமாள், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.