10
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார்.மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை.மதுரை முக்கியமான இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை. மற்றும் மோப்ப நாய்கள் மூலமாகவும் தீவிர சோதனை செய்யப்பட்டது.தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல். தீவிர சோதனைக்கு பின் இது வெறும் புரளி என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.