பேரையூர் இளைஞர் வலு தூக்கும் போட்டியில் மூன்று பதக்கம்…

திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் 12/01/2020 ஆம் தேதியன்று மகளிர் மற்றும் ஆடவர் ஓப்பன் டெட் லிப்ட் மற்றும் பென்ஞ்ச் பிரஸ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்கினர. இப்போட்டியில் திருச்சி சாய் பிட்னஸ் ஜிம் சார்பில் கலந்து கொண்ட பேரையூர் இளைஞர் ம.மனோஜ் பிரபாகரன் 120+ ஆடவர் சப்ஜுனியர் பிரிவில் 2 தங்கப்பதக்கமும் ஜுனியர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும் பெற்றார். அவருக்கு திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் விசுராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் திருச்சி சாய் பிட்னஸ் நிருவர் சாய் சரன் வாழ்த்து கூறினார் மற்றும் மக்கள் பாதை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரையூர் ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..