பெரியபட்டினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் ஊராட்சி முத்தரையர் நகர் நியாயவிலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , பெரியப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சே.அக்பர் ஜான் பீவி வழங்கினார். வார்டு உறுப்பினர் செல்வராணி, கிராம பூசாரி காயாம்பு, பெரியபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் அஸ்கர் அலி, ரேஷன் கடை பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..