8
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குஞ்சார்வலசை வடக்கு தெரு, நடுமனைக்காடு பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வேதாளை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.செய்யது அல்லா பிச்சை முதற்கட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர் சீனி அப்துல் ரஹ்மான், மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் முருகேசன், நாடார் சங்க நிர்வாகி தில்லை, மேற்கு தெரு ஜமாத் நிர்வாகி மாலிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.