6
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16-ஆவது வார்டு எல்லிஸ் நகர் சர்வோதயா நகர் பகுதியில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் உடைந்து சாலை வெள்ளம்போல் கூடியது என நமது கீழை நியூஸ்( சத்திய பாதை மாத இதழ்) தளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இதன் எதிரொலியாக அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தற்போது சாலையில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை நீரை சரி செய்து வருகிறார்கள் .அதன் புகைப்படத்தை உடனடியாக நமக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளார்கள். உரிய நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு மற்றும் நமது கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.