12
கீழக்கரை கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று 8.1.2020 நடை பெற்றது
இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாத்தலைவர் தலைமை தாங்கினார். முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் திருப்புல்லாணி, வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி வாசுகி, தில்லையேத்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்மூர்த்தி, டாக்டர் செய்யது ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசியர் முகம்மது இபுராகிம் நன்றி கூறினார். பின்னர் நிழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.