6
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணத்தை சேர்ந்தவர் ஜாபின்(23). இவர் மார்த்தாண்டதில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். பின்பு வந்து பார்க்கும் போது வண்டி காணவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவசங்கர், குற்றவாளிகளான மார்த்தாண்டத்தை சேர்ந்த ஆனந்த்(30) மற்றும் ஜெபின்(34) ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.