கொடைரோடு அருகே பயங்கர விபத்து, சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி.

கொடைரோடு அருகே தேசிய நான்கு வழிச்சாலையில் கோர விபத்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி 2 குழந்தைகள் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையநாயக்கனூர் அருகே. மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக ஐயப்ப பக்தர்கள் வந்த கார் ஒன்று முன்பக்க டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் எனப்படும் தடுப்பு சுவரை தாண்டி கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 3 நபர்கள் பலி. மேலும் காரில் பயணம் செய்த ஒரு பெண் ஒரு ஆண் என 2 – குழந்தைகள் திண்டுக்கல் தனியார் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..