ரயில் மோதியதில் ஒருவர் பலி. ரயில்வே காவல்துறை விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் கிடப்பதாக ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் யார் என விசாரித்தபோது மதுரை திருநகர் அடுத்த ஜோசப் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி வயது ஐம்பது மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் உணவு விடுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாக தகவல் தெரிவித்தனர். பின் உடலை கைப்பற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..