70 ஆண்டுகளாக பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த மகப்போரு மருத்துவமனை 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்ததால் தொடர்ந்து மதுரை பாரளமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இடம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜோதிபாசு மனு கூடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கட்சியில் இருந்து விலகுவதாக மதுரை முழுவதும் நோட்டீஸ் ஒட்டிய தனது எதிர்ப்பை தெரிவித்தார்.மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள் இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது ஆனால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை 12 ஆயிரம் பேர் வசிக்கும் பைகாரா பகுதிக்கு மாற்றப்பட்டது அதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் மனு கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கண்டனத்தை தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக மதுரை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தனது எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளார் எனினும் எங்களது பணி தனிப்பட்ட முறையில் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.