கோவை மாவட்டம் CITU தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம்.!
கோவை மாவட்ட CITU தொழிற்சங்கம் மாவட்ட குழு கூட்டம் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு CITU மாவட்டத் தலைவர் சி, பத்மநாபன் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் S, கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிஐடியு மாநில பொது செயலாளர் G. சுகுமாரன், மாநில துணைத் தலைவர், M சந்திரன் கூட்டத்தில் கலந்துகொண்ட CITU நிர்வாகிகளிடம் வருகின்ற எட்டாம் தேதி நடைபெறுகின்ற அகில இந்தியா பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற அந்தந்த சங்கங்கள் இன்றிலிருந்து கவனமாக வேலை செய்ய வேண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கோவை மாவட்டம் முதன்மையாக இருக்க வேண்டும் இன்றிலிருந்து நிர்வாகிகள் வேலை நிறுத்தம் சம்பந்தமான பணிகளை செய்ய வேண்டும் தொழிலாளர்களை திரளாக பங்கேற்க வைக்க வேண்டும் என கூறினார் இந்தக் கூட்டத்தில் CITU தொழிற்சங்கத்தில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் கூட்ட நிறைவில் அருணகிரிநாதன் நன்றியுரை கூறினார்.
You must be logged in to post a comment.