7
மதுரை மாவட்டம் ஜெயராணி 30 நேரு நகரை சேர்ந்தவர்.பைபாஸ் சாலை நேரு நகர் மெயின் ரோட்டில் தன் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது நேருநகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்கழுத்தில் இருந்த சுமார் 10 பவுன் தாலி செயினை அறுத்து சென்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இரு நபர்கள் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்து செய்தது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.