6
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள ராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை y.ஒத்தக்கடை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.மேற்கண்ட வழக்கு விசாரணை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கோவிந்தன், ராஜேஷ்குமார், மணிகண்டன், துரைப்பாண்டி ஆகிய 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மேற்கண்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்று கொடுத்த மதுரை மாவட்ட போலீசாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.