7
மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்படி மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரக காவல் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமுலாக்க பிரிவு காவல் அதிகாரிகளுடன் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டதில் 48 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 48 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 872 மதுபாட்டில்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணம் ரூ.4410/- ம் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்திய (TN 59 BA 8830) என்ற HYUNDAI I20 கார் ஒன்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.