Home செய்திகள்மாவட்ட செய்திகள் கஞசா விற்றவா்கள் கைது

கஞசா விற்றவா்கள் கைது

by mohan

மதுரை மாவட்டம் . 1, அப்பன்திருப்பதி போலீசார், அப்பன்திருப்பதி, பஜார் அருகே ரோந்து சென்றபோது அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சங்கையா (22) என்பவரை விசாரணை செய்தபோது, அவர் விற்பனைக்காக கஞ்சா 150 கிராம் வைத்திருந்தவரை கைது செய்தும். 2 ஒத்தக்கடை போலீசார், ராஜாகூர் அருகே ரோந்து சென்றபோது, அங்கே முருகன் என்பவரிடம் இருந்து சுமார் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தும். 3, சிலைமான் போலீசார், நாட்டார்மங்கலத்தில் ரோந்து சென்றபோது அழகேசன் (35) என்பவர் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்தவரை கைது செய்தும் . 4, சிந்துபட்டி போலீசார், கட்டதேவன் பட்டியில் ரோந்து சென்றபோது, அங்கே பாண்டி (62) என்பவர் விற்பனைக்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்தும். 5, உத்தப்பநாயக்கனூர் போலீசார், அய்யனார்குளம் அருகே ரோந்து சென்றபோது அங்கே சரசு (59) என்பவர் விற்பனைக்காக கஞ்சா 300 கிராம் வைத்திருந்தவரை கைது செய்தும். 6, எழுமலை போலீசார், ஏழுமலை கோலிகண்ணு என்பவர் வீடு அருகே சென்றபோது, அங்கே கலா (42) என்பவர் விற்பனைக்காக கஞ்சா சுமார் 300 கிராம் வைத்திருந்தவரை கைது செய்தும். 7, விக்கிரமங்கலம் போலீசார் விக்கிரமங்கலம், கடைவீதியில் ரோந்து சென்றபோது, அங்கே எழும்பம் (எ) ஜெயக்குமார் (37) என்பவர் விற்பனைக்காக கஞ்சா 200 வைத்திருந்தவரை கைது செய்தும். 8, T.கல்லுப்பட்டி போலீசார், கல்லுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றபோது அங்கே ஜெயம் (56) என்பவர் கஞ்சா விற்பனைக்காக சுமார் 3 கிலோ 100 கிராம் வைத்திருந்தவரை கைது செய்தும், மேற்படி நபர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!