8
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தார்கள், ஆலிம் பெருமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் ,மதிமுக ஆகிய கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியை ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.