அரசு தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது.

மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் போலீசார், கேட்டுகடை அருகே ரோந்து சென்றபோது,அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட, பூட்டான் மாநில லாட்டரி சீட்டை விற்றுக் கொண்டிருந்த திருப்பாலையை சேர்ந்த கமலதாசன் (42) ஈரோட்டை சேர்ந்த ராஜா (29) என்பது தெரியவந்தது. மேற்படி நபர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ- 14, 930 ஐ பறிமுதல் செய்த அலங்காநல்லூர் போலிசார், மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..