பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் சாந்தி ஆகிய இருவரும் ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களுக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினார்கள். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விளக்கம் அளித்தார். 300- க்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..