4
மதுரை மாவட்டம்மாட்டுத்தாவனி. இருந்து செல்லும் புதூர் சாலையில் தயாபார்க் அருகில் வரும்பொழுது சாலையின் திடீரென 10 அடி பள்ளம் இருந்ததை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிதீடிரென பள்ளத்தில் விழுந்துள்ளாா். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. தலைக்கவசம் அணிந்து இருந்ததால் உயிர்தப்பினார் .சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியது யார் என தெரியவில்லை. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பள்ளத்தை தோண்டி விட்டு உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.