4
வேலூர் சுண்ணாம்புகார தெருவில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாக கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் படி வருவாய் கோட்டாச்சியர் கணேஷ், தாசில்தார் சரவணமுத்து மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் மற்றும் அட்டை பெட்டியில் இருந்த குட்கா, பான் மசாலாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ 28 லட்சமாகும். பதுக்கி வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.