வைகை நீரை பெண் தெய்வமாக நினைத்து கார்த்திகை தீபமேற்றி வழிபட்ட உசிலம்பட்டி சிறுமிக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 20கிலோமீட்டர் தொலைவை கடந்து உசிலம்பட்டி கண்மாய்க்கு வந்து கொண்டிருக்கிறது.தற்போது உசிலம்பட்டி கண்மாயிலிருந்து மாதரை கண்மாய்க்கு சென்று கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து உசிலம்பட்டி பகுதி மக்களின் 30ஆண்டுகால கனவான வைகை தண்ணீர் 58 கிராம கால்வாயில் உசிலம்பட்டி கண்மாய்க்கு வருவதேயாகும். இதனையடுத்து வைகை தண்ணீரை பெண் தெய்வமாக நினைத்து உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சாயி என்ற சிறுமி தண்ணீருக்கு பூஜைகள் செய்தும்,தீபம் ஏற்றியும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர்.இதனை பார்த்த பொதுமக்கள் சிறுமியை பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..