Home செய்திகள் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! – தர்மஅடி கொடுத்த மக்கள்

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! – தர்மஅடி கொடுத்த மக்கள்

by mohan

திருப்பத்தூரில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கத்தில், மனதிற்குள் ஒருதலைப்பட்சமாக காதலை வளர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனைதொடர்ந்து ஜெகன் அப்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று காலை அப்பெண்ணை பின்தொடர்ந்து ஜெகன் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில், ஓடும் பேருந்தில் அப்பெண்ணின் கழுத்தில் அவர் தாலி கட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.பின்னர் வாணியம்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவத்தால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!