உசிலம்பட்டி அருகே ஆண் வாரிசு இல்லாததால் இறந்த தனது அப்பாவை 3மகள்களே அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமுத்தேவர் (78) – கருப்பாயி (65) தம்பதியினர். வுpவசாயிகளான இவர்களுக்கு தவப்பாண்டி என்ற மகனும், ஒச்சம்மாள், ஈஸ்வரி, பாண்டியம்மாள் என்ற 3 மகள்களும்; உள்ளனர்.மூவருக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.மகன் தவப்பாண்டிக்கும் திருமணம் முடிந்து உள்ளுரிலேயே தனி வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகன் தவப்பாண்டி விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமுத்தேவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை மோசமாகவே மருத்துவமணையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.; அதிகாலையில் ராமுத்தேவர் மரணமடைந்தார். இவருடைய மருமகள் உள்பட உறவினர்கள் தகராறில் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இவரின் உடலை அடக்கம் செய்ய ஆண்வாரிசும் இல்லாததால், மகள்கள் ஒச்சம்மாள், ஈஸ்வரி, பாண்டியம்மாள் ஆகிய மூவரும் தனது தந்தையை ஊர் வழக்கப்படி தாரை தப்பட்டையுடன், கிராமவழக்கப்படி குடம் உடைத்து பல்வேறு இறுதி சடங்குகளையும் செய்தனர். பின்னர் மயானம் வரை சென்று தனது தந்தையின் முகத்தை பார்த்தும் குழியில் மண் தள்ளி கடைசி சடங்குகளையும் செய்துதுள்ளனர்.
பொதுவாக பெண்கள் மயானத்திற்கு செல்ல மாட்டார்கள்.ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துமிடம் மயானமும் ஒன்று.ஆண் வாரிசு இல்லையென்றாலும் பெண்வாரிசுகளே தனது தந்தையை அடக்கம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.