நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 தலைவருக்கும் பதவிக்கும், 20 ஒன்றிய கவுன்சில் பதவிக்கும், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கும், சுமார் 217 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த 9ஆம் தேதி முதல் அனைத்து பதவிக்கும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் நேற்று வரை ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒரு நபரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஏழு பேர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்..அதேபோன்று அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு புறப்பட்ட போதும் இதுவரை அஞ்சு மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குல்லிசெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வைகை பாலன் , என்பவரும்,எத்திலோடு ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திருப்பதி மனைவி ராஜலட்சுமி என்பவரும், மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜான் இன்னாசி மனைவி மாயக்காள், புல்லட் உள்ளிட்ட 10 பேர் இதுவரை மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இன்னும் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்க வில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
5
previous post
You must be logged in to post a comment.