விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக ஊர்க் கூட்டம் நடத்தியுள்ளனர்.இக்கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ராமசுப்புவை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்துள்ளர்கள். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் சதிஷ்குமார் ( 27) எதிர்ப்பு தெரிவித்துள்ளாா். அப்போது இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக பிரமுகர் ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்வோம், ஊருக்கும், கோவிலுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு தரப்பினர் வாதம் செய்துள்ளர்கள். இதனை எதிர்த்து தட்டிக் கேட்டதால் சதிஷ்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டுபலத்த காயத்துடன்சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதிஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அதிமுகவைச் சேர்ந்த ராமசுப்பு மற்றும் சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.