11
பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தனியார் உணவு விடுதி அருகே மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது. பொதுமக்கள் உடனடியாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மதுரை தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன் குழுவினர் விரைந்து சென்று மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை விரைவாக அணைத்தனர். அதற்கு முன் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்து தீ அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.