மாமல்லபுரத்தில் மாநில அளவிலான அறிவியல் துளிர் வினாடி வினா இராமநாதபுரம் பள்ளி 2 ஆம் இடம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா 2019 போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் டிச.7 ல் நடைபெற்றது. பல்வேறு வயது பிரிவினருக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஜெகத் ஜனனி, ஏழாம் வகுப்பு மாணவி ஹர்ஷிதா, ஆறாம் வகுப்பு மாணவர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து ராமநாதபுரத்திற்கு பெருமை சேர்த்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..