Home செய்திகள் நாய் என்று அலட்சியம் காட்டாமல் கால்வாயில் விழுந்த நாயை மீட்ட மதுரை தீயணைப்புத்துறையினர் குவியும் பாராட்டுக்கள்

நாய் என்று அலட்சியம் காட்டாமல் கால்வாயில் விழுந்த நாயை மீட்ட மதுரை தீயணைப்புத்துறையினர் குவியும் பாராட்டுக்கள்

by mohan

மதுரை பைபாஸ் சாலை சிங்கேரி நகர் அருகே கிருதுமால் வாய்க்காலில் நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக  விழுந்தது. பொதுமக்கள் அதை மீட்க முயற்சி செய்தும் பயன் அளிக்காத காரணத்தினால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், விரைந்து வந்த நிலைய அதிகாரி  வெங்கடேசன் தலைமையிலான மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி கால்வாயில் விழுந்த நாயை உயிருடன் மீட்டனர். நாய் என்று அலட்சியம் காட்டாமல் அதுவும் உயிர் தான் என விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!