9
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ராமநாதபுரத்தில் தடையை மீறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்பினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் சந்தை பேட்டை பகுதியில் தடையை மீறி எஸ்டிபிஐ., சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, முன்னாள் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை இதில் 360 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
You must be logged in to post a comment.