8
மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அதிகாரி மதுரை ரயில்வே காவல் துறையின் கொடுத்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய மதுரை ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் என விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.