Home செய்திகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினியை முதல்வராக்குவோம் – என உசிலம்பட்டியில் ரஜினி ரசிகர்கள் சூளுரை

வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினியை முதல்வராக்குவோம் – என உசிலம்பட்டியில் ரஜினி ரசிகர்கள் சூளுரை

by mohan

வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினியை முதல்வராக்குவோம் – என உசிலம்பட்டியில் ரஜினி ரசிகர்கள் சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றினர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரும் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்-ன் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 12ஆம் தேதி பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியை முதல்வராக்குவோம் என சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றினர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!