6
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள கூத்தியார்குண்டு தோப்பூர் கம்மாயில் மர்ம நபர்கள் லோடு ஆட்டோக்களில் வந்து கம்மாயில் மருந்து கழிவுகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சி குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாலும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழைநீர் விஷமாக மாறி உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.