8
திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீல்பார்த்தி அப்பல நாயுடு என்ற நபர், துர்கை அம்மன் கோவில் அருகே உள்ள எம்பி எலக்ட்ரிக்கல் கடை அருகில் உள்ள இரும்பு படிக்கட்டில் ஏறி மின் கம்பத்தின் வழியே செல்லும் மின் வயரை பிடித்து, சம்பவ இடத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்து கொண்டவர் தன்னுடன் தனது ஆதார் கார்டை வைத்திருந்தார். அதனை வைத்து தற்கொலை செய்து கொண்டவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கீல்பார்த்தி அப்பல நாயுடு என்பது தெரியவந்துள்ளது.இவர் எதற்காக யாருடன் திருவண்ணாமலை வந்தார். எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்ற விபரம் இதுவரை எதுவும் தெரியவில்லை.இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
You must be logged in to post a comment.