Home செய்திகள் இராமநாதபுரத்தில் ரத்த சோகை கண்டறியும் முகாம்

இராமநாதபுரத்தில் ரத்த சோகை கண்டறியும் முகாம்

by mohan

இராமநாதபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் பெண்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இராமநாதபுரம் அன்னை சத்யா அரசு பெண்கள் காப்பகத்தில் நடைபெற்ற முகாமிற்கு இன்னர்வீல் சங்க தலைவர் கவிதா செந்தில்குமார் தலைமை வகித்தார். ரத்த சோகை குறைபாட்டால் ஏற்படும் தீங்குகள் குறித்து காப்பக பெண்கள், சிறுமிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. உணவு மற்றும் சத்துணவு குறித்து டாக்டர்கள் மதுரம் அரவிந்தராஜ், கனக பிரியா பால்ராஜ், உணவு கட்டுப்பாடு முறைகள் குறித்து சண்முக பிரியா ஆகியோர் பேசினர். இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு ரூ.14, 200 மதிப்பில் ரத்த அதிகரிப்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!