மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், 8 வது ஊதியக்குழு நிலுவை தொகையை 1.1.2016 முதல் வழங்கிட வேண்டியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியும், மத்திய அரசு பணியாளர் களுக்கு இணையாக அனைத்து படிகள் மற்றும் போனஸ் ரூ.7000 பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டியும், நிரந்தரம் ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டியும், ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 வழங்கிட வேண்டும். போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இப்போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் “செல்லத்துரை”, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில இணைச்செயலாளர் மாரிமுத்து, மாநில துணைதலைவர் கள் தினகரன், மரகதலிங்கம், விஜயகுருசாமி, மதுரை மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டி, மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், அருணாச்சலம், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
8
You must be logged in to post a comment.