உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் ராமநாதபுரம் காங்கிரஸ் கமிட்டியினர் விருப்ப மனு அளித்தனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம..தெய்வேந்திரன் தலைமையில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இரண்டு தினங்கள் நடைபெறும் இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளித்துவருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவண காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாநில காங்., கமிட்டி உறுப்பினர்கள் பாரிராஜன், சோ.பா.ரங்கநாதன், பொருளாளர் அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், மேகநாதன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகேசன், மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கினர்.திருவாடானை வட்டார தலைவர் ஜெயபாண்டி, நகர தலைவர்கள் செந்தில்குமார், அப்துல்அஜீஸ், வட்டாரத் தலைவர்கள் ராமர், புவனேஸ்வரன், மகிளா காங்கிரஸ் தலைவி பெமீலா, காருகுடி சேகர், சிறப்பு பேச்சாளர் தீப்பொறி.கருணாகரன் மற்றும் வேலுச்சாமி, தொண்டி நகர. தலைவர் ராஜா உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
9
You must be logged in to post a comment.