Home செய்திகள் மதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்

மதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்

by mohan

மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் இருந்து நேரடியாக வைகையாற்றின் கரையில் கழிவு நீர்கள் அதிகமாக கலந்து கொண்டு வருகிறது.  பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.குறிப்பாக வடகிழக்கு பருவமழை அதிகமாகப் புரிந்து வந்த இந்த சூழ்நிலையில் வைகை நதியில் கடந்த 10 நாட்களாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.இந்த நிலையில் குருவிகாரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் லிட்டர் கழிவு நீர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைகை ஆற்றில் கலந்து ஒரு முறை சூழல் நிலவி வருகிறது..

மாநகராட்சி நிர்வாகம் தற்போது வரை இது கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பொது மக்களிடையே மிகப்பெரிய கேள்வி எழுப்பியுள்ளது…குறிப்பாக இரவு நேரங்களில் பம்பிங் ஸ்டேஷன் மூலமாக அதிகப்படியான கழிவு நீர்கள் வைகையாற்றில் கலக்கப்படும் பட்டப்பகலில் காலை நேரத்தில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட வருகிறது…மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!