கஞ்சாவை பதுக்கிய மூவர் கைது.

மதுரை மாவட்டம் . சேடபட்டி, கணவாய்பட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சேடபட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்  சேடபட்டி போலீசார் சோதனை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த வீமன் (42)கட்டதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (21) கணவாய்கேட்டை சேர்ந்த சௌடேஸ்வரி (30) என்பவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா சுமார் 12. கிலோ 300 கிராம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி நபர்களை கைது செய்தும், கஞ்சாவை பறிமுதல் செய்தும், சேடப்பட்டி போலிசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..