மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி தலைமையில் கண்காணிப்பாளர் ஊர்மிளா முன்னிலையில் சோதனை நடைபெற்றுது.இந்த சோதனையில் மதுரை திலகர் திடல் உதவி ஆணையர் வேணுகோபாலன் மற்றும் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இவர்களோடு ஆண் மற்றும் பெண் AR போலீசாரும் சோதனை செய்தனர்.இவர்களோடு சிறைக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் சிறை அலுவலர்,துணை சிறை அலுவலர் ,உதவி சிறை அலுவலர் ,முதல் தலைமைக் காவலர்கள், 51 முதுநிலைகாவலர்களும் இணைந்து அனைத்து கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர்.மேலும் இதே போன்று பெண்கள் தனி சிறையிலும் சோதனை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..