இராமநாதபுரத்தில் தேசிய பத்திரிகை யாளர் தின விழா

இராமநாதபுரத்தில் நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நடந்தது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். சமூக ஆர்வலர்கள் லியாகத் அலி, காசிம் ராமநாதபுரம் வர்த்தக சங்க துணைத் தலைவர் கவிஞர் தஸ்லீம் காஜா முன்னிலை வகித்தனர்.மூத்த பத்திரிகையாளர் ஐ.சிவசங்கரனுக்கு, டாக்டர் எஸ் எம் பாரூக் கவுரவித்தார்.நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன் தேசிய விருதாளர் பிவிஎம்அப்துல் ரசாக் பேசினார். பத்திரிகையாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..