Home செய்திகள் இராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

இராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

by mohan

இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் முனீஸ்வரன், 22. வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித்திரிந்தார். திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரது தம்பி குமார் , வெளியில் செல்லும்போது இதோ திருடன் தம்பி போகிறான் என பலர் அவதூறு பேசிவந்தனா. இதனால் மன உளச்சல் அடைந்த குமார் , முனீஸ்வரனின் கன்னத்தில் முருங்கை தட்டையால் நேற்றிரவு12.11.19 தாக்கினார். இதில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் முனீஸ்வரனை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முனீஸ்வரனின் தாயார் பாப்பா புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!