7
ஜன்கோன் மாவட்டம் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ. தாடிகொண்டா ராஜையா. ஆளும் கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில், சில்பூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்றார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்ற அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரில் அமர்ந்திருக்கும் அவருக்கு மாணவி, எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு ஊட் டுகிறார் .
இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராஜையா, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவர். அவராக முன் வந்து சாப்பாடு ஊட்டினார். அவரை எனது மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக்கொண்டேன். எதுவுமே தெரியாமல் பலரும் விமர்சிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்
You must be logged in to post a comment.