Home செய்திகள் இராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

by mohan

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைப்பு பெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் இன்று (12.11.19) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.பி.தினகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.நியாய விலைக்கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன் முறைப்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திப்பட்டன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!