மதுரை – உடைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா

மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு  திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது. இதை பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரியிடம் தகவல் தெரிவித்தால் உடனடியாக செல்கிறோம் செய்கிறோம். என்று சொல்லிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உயிர்பலி ஆகிய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..