ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போதுள்ள நிதியை உயர்த்தி 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். சமூக பொருளாதார அடிப்படையில் கணக்கு எடுக்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல் ஒவ்வொரு சிற்றூராட்சிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். புதிய பயனாளிகளிடம் இருந்து மனு வாங்க கிராம நிர்வாக அலுவலர், வங்கி தொடர்பாளர், சேல்ஸ்மேன் மற்றும் மின் ஊழியர் ஆகியோர் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். கிராம மக்களின் பொருளாதாரம் பெருக கேரள மாநிலம் போல 100 நாள் பணிக்கு ரூபாய் 229 முழுமையாக வழங்க வேண்டும். கட்சி டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளூர் மேஸ்திரிகளின் குழு அமைத்து கட்டுமானப்பணிகள் அந்தக் குழுக்களுக்கு வழங்கினால் தரமான முறையில் கட்டிடங்கள் அமைவதும், கிராமப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாலிக்கயிறை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முற்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
6
You must be logged in to post a comment.