6
இலங்கை மன்னார் மாவட்டம் பதினாறாம்கட்டை சித்திரை குமார் மகன் அருண் (24). அகதியான இவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அவரது உறவினரை சந்திக்க இன்று காலை வந்த இவர், மண்டபம் அருகே சுடுகாடு பகுதியில் நின்றார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் , அருணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் இருந்த ரூ. 1லட்சம் கள்ள நோட்களை (500 நோட்டுகள்) பறிமுதல் செய்தனர். அருணை கைது செய்த கியூ பிரிவு போலீசார், ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரித்து வருகிறார்.
You must be logged in to post a comment.