Home செய்திகள் நிலக்கோட்டை அருகே வைகை பெரியாறு பிரதான கால்வாயில் நிர்வாண நிலையில் பெண் பிணம் மீட்பு

நிலக்கோட்டை அருகே வைகை பெரியாறு பிரதான கால்வாயில் நிர்வாண நிலையில் பெண் பிணம் மீட்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை ஊராட்சி கரட்டூர் பகுதியில் செல்லும் வைகை பெரியார் பிரதான கால்வாயில் 12 கண் பாலத்தில் சுமார் 45 வயது மதிப்புள்ள ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் மிதந்து கொண்டு இருந்தது.இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலர் செந்தில் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமா ரிடம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் கண்ணன் புகார் கொடுத்தார்.தகவலறிந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்பிற்கு தகவல் கொடுத்தார்..இதனைத் தொடர்ந்து பெரியார் பிரதான கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கயிறை கட்டி இருபுறமும் இறங்கி பெண்ணின் பிணத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.பெண்ணின் உடலை அப்பகுதியில் இருந்த கிராம மக்களிடம் காண்பித்து அடையாளம் தெரியாததால் உடனே பெண்ணின் பிணத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.இந்தப் பெண் ஆற்றில் குளித்தபோது ஆற்று நீர் அடித்து இழுத்து வந்ததா? இல்லை யாரும் இப்பெண்ணை ஆற்றில் கொலை செய்துவிட்டு ஆற்றில் வீசி சென்றார்களா? ஆற்றில் மிதந்த பெண் ணின் உடல் நிர்வாண நிலையில் இருப்பதால் பல்வேறு சன் சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!